இலங்கையில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (7) திறந்து வைத்தார்.
சுவிட்ஸர்லாந்தின் புகழ்பெற்ற சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலான மோவன்பிக் நிறுவனமே இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தனது கிளையை கொழும்பில் ஆரம்பித்துள்ளது.
எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் பாவனைக்காகத் திறந்துவிடப்படவிருக்கும் இந்த 24 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மிகச் சரியான நிலையில் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்படுகிறது என்று, மோவன்பிக் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ஒலிவியர் ச்சாவி தெரிவித்தார்.
இந்த ஹோட்டலின் ஒவ்வொரு மாடியும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான அமைப்பில் இருக்கும் என்றும் இது இலங்கையர்களுக்கும் சரி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சரி வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மோவன்பிக் நிறுவனத்திற்குச் சொந்தமான 83 ஹோட்டல்கள், உலகின் 23 நாடுகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM