உலகில் முதல் தரத்திலான டயர் தயாரிப்பை மேற்கொண்டுவரும் றிச்சட் கைத்தொழிற்சாலை ஹொரணையில் அமைக்கப்படவுள்ளது.
இலங்கை முதலீட்டு வலயத்தில் அமையவுள்ள இந்த கைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
1125 கோடி ரூபா முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புகள் உருவாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுற்றாடல் தொடர்பில் முழுமையான ஆய்வுகளுக்கு மத்தியில் பசுமை கைத்தொழில் துறையை இலக்காக கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் பாரிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு மைல்கல்லாக இந்த தொழிற்சாலை அமையவுள்ளது.
ஒன்றரை வருட கால குறுகியகாலப்பகுதியில் இந்த தொழிற்சாலை சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த தொழிற்சாலையின் மூலம் மேற்கொள்ளப்படும் தயாரிப்புக்களில் 75 சதவீதமானவை வெளிநாட்டு சந்தைகக்கு அனுப்பப்படவுள்ளது. எஞ்சியவை உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக றிச்சட் கோப்பிறேசன் லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர் நந்தன லொக்குவிதான தெரிவித்துள்ளார்.
புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மகாசங்கத்தினர், மதத்தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM