இங்கிலாந்து மகாராணியாரை அவரது அரண்மனைக் காவலர் ஒருவரே தவறுதலாக துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் சில வருடங்களுக்கு முன் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தூக்கம் வராத இரவுகளில் இங்கிலாந்தின் எலிசபெத் மகாராணியார் தனது பக்கிங்ஹாம் அரண்மனைத் தோட்டத்தில் உலாவருவது வழக்கம்.
சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு தூக்கம் வராத அதிகாலைப் பொழுதில் சுமார் 3 மணியளவில் எலிசபெத் மகாராணியார் தோட்டத்தில் நடந்து சென்றுள்ளார்.
இருளில் ஒரு உருவம் நடந்து செல்வதைக் கண்ட ஒரு அரண்மனைக் காவலர் ஒருவர் திடுக்கிட்டார். உடனே, தன்வசமிருந்த துப்பாக்கியை மகாராணியை நோக்கி நீட்டியபடி, “யார் அது?” என்று கேட்டார்.
அதற்கு பதில் சொல்லத் திரும்பியபோதே அது வேறு யாருமல்ல, மகாராணிதான் என்பதை அவர் உணர்ந்தார். உடனே மகாராணியிடம், “இன்னும் ஒரு நொடி தாமதித்திருந்தால் கூட உங்களைச் சுட்டிருப்பேன். என்னை தயவு செய்து மன்னியுங்கள்” என்று பணிந்து கேட்டார்.
இருந்தாலும், தவறு தன்னுடையது தான் என்பதைப் புரிந்துகொண்ட மகாராணி, “பரவாயில்லை. இனிமேல் இவ்வாறு உலா வருமுன் காவலர்களுக்குத் தகவல் சொல்லிவிடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இச்சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆன போதும், சற்று முன்னரே இந்தச் செய்தியை லண்டன் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம், 41 வயது நபர் ஒருவர் அரண்மனையின் பாதுகாப்புச் சுவரில் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்தார். காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டதும், “மகாராணி உள்ளே இருக்கிறாரா?” என்று சர்வசாதாரணமாகக் கேட்டிருந்தார்.
அதற்கு முன், 2013ஆம் ஆண்டு, இளவரசர் அண்ட்ரூவை தவறுதலாகச் சந்தேகித்த காவலர்கள் அவரைத் தடுத்து வைக்க முயன்று, பின்னர் அது இளவரசர் என்று தெரிந்ததும் அவரிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவமும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM