முல்லைத்தீவிலிருந்து பரந்தன் செல்லும் A 35 பிரதான வீதியில் வட்டுவாகல் பாலப்பகுதியில் கனரக வாகனம் ஒன்றை ஏற்றிய நிலையில் பாரவூர்தியொன்றின் டயர் காற்றுபோனதால் அந்த வீதியூடாக போக்குவரத்து பலமணிநேரம் தடைப்பட்டுள்ளது.
குறித்த பாலம் மிக ஒடுக்கியதாகவும் சேதமடைந்த நிலையிலும் காணப்படுவதால் காரணமாக பாலத்தின் நடுப்பகுதியில் குறித்த வாகனம் பழுதடைந்தமையினால் இந்த வீதியூடாக சேவையிலீடுபடும் பஸ்கள் முதல் ஏனைய கனரக வாகனங்களும் மாற்றுவழியை பயன்படுத்த முடியாத நிலையில் பாலத்தின் இருமருங்கிலும் நீண்டவரிசையில் மாலை ஐந்து மணியிலிருந்து பலமணிநேரமாக காத்து நிற்கின்றன.
தூர இடங்களிலிருந்து பஸ்களில் முல்லைத்தீவுக்கு வந்த பயணிகள் வட்டுவாகாலிலிருந்து முல்லைத்தீவு நகரம் வரை நடந்து செல்வதனைக்காணமுடிகின்றது.
குறித்தவாகனத்தை செலுத்திவந்தவர்கள் வாகனத்தை நடுவீதியில் விட்டுவிட்டு சென்றநிலையில் கடற்படையினரும் பொதுமக்களும் இணைத்து வீதியில் உள்ள வாகனத்தை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பாலம் மிகப்பிரதானமான பாலமாக காணப்படுவதுடன் மிக ஒடுக்கமாகவும் சேதமடைந்து காணப்படுவதனால் மிகவிரைவில் புனரமைக்கவேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM