முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில் பாடசாலைக்கு செல்லும் வயதிலிருக்கும் சிறுவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் உரிய தரப்பினர் இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்களால் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நீராவிப்பிட்டி பகுதியில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கிவரும் வாரச்சந்தையில் பல சிறுவர்கள் வியாபாரிகளால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது. இவ்வாறு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டவிரோதமானது என்பதை அறிந்தும் சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேவைளை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூட இதனை கண்டும்காணாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் அனைவரும் அறநெறி பாடசாலைகளுக்கு கட்டாயம் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடும் சட்டமும் நடைமுறையில் இருக்கின்றபோதும், அவ்வாறு அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாது குறித்த மாணவர்களை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வியாபாரிகள் மீது குறித்த அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பு
Published By: Priyatharshan
05 Jan, 2017 | 09:50 AM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM