வவுனியாவில் வாள் வெட்டுக்குழுக்கள் அட்டகாசம்

Published By: Priyatharshan

05 Jan, 2017 | 09:33 AM
image

வவுனியா கற்குழி பகுதியில் நேற்று இரவு 09.50 மணியளவில் வாள் வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் புரிந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

புதுவருட தினத்தன்று வவுனியா, கற்குழிப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த வாள் வெட்டுச்சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சையின் பின்னர் நேற்று மாலை வீடு திரும்பியதையறிந்த சிலர் இரவு 9.50 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்து சிகிச்சையின் பின் வீடு திரும்பியவரை தாக்க முயன்றுள்ளனர்.

குறித்த வீட்டார் குக்கூரலிட்டு சத்தமிட்டமையினால் முச்சக்கரவண்டியில் வந்த நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பில் வாவுனியா பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40