இலங்கை கடற்படை கடந்த வருடத்தில் கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் மூலம் 226 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 6371 நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.
எவன்கார்ட் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்த கரையோரப் பாதுகாப்பு பணி நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடற்படைக்கு வழங்கப்பட்டது.அதன்படி இந்நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்படை இதுவரை ஈட்டியுள்ள வருமானம் 263 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்கு 7457 கப்பல் பருவ நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது.
கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட வருமானம் அரசின் ஒன்றிணைந்த நிதியத்திற்கு நேரடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM