2015ல் நிறுவப்பட்ட இலங்கை மருத்துவ உபகரண தொழிற்துறை வர்த்தக சம்மேளனமானது, தனது இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டத்தை 9ம் திகதி, மார்கழி மாதம் 2016, வெள்ளிக்கிழமை அன்று நடாத்தியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் டாக்டர். ரஜித்த சேனாரத்ன மற்றும் அதிதியாக தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு ஆணையத்தின் தலைவரான (NMRA) பேராசிரியர் அசித்த டி சில்வா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும், இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சு, தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு ஆணையம், அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் உயிர்மருத்துவ பொறியியல் சேவைகள் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களும் கலந்துகொண்டனர்.
இவ்வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வில் உரையாற்றுகையில், SLCMDIயின் தலைவர் சயந்தன், “இலங்கை மருத்துவ சாதன இண்டஸ்ரி வர்த்தக சம்மேளனமானது, நாட்டில் காணப்படும் சுகாதார தேவைகளிற்கான நீடித்த தீர்வுகளை வழங்கும் முகமாக செயற்படும் சம வாய்ப்பு மற்றும் ஒழுங்குநெறியுடைய நிறுவனமாகும்” என்று குறிப்பிட்டார்.
மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களிற்கான வேகமாக வளர்ந்துவரும் புதுமையான தொழிற்துறையை குறிப்பாக பிரதிநிதித்துவப்படுத்தும் குறிக்கோளுடன் மற்றும் தங்களுடைய குறைபாடுகளை முன்வைக்குமுகமாகவும் இலங்கை மருத்துவ உபகரண தொழிற்துறை வர்த்தக சம்மேளனமானது (SLCMDI), இலங்கை மருத்துவ துறை வர்த்தக சம்மேளனத்திலிருந்து வேறுபட்டு நிறுவப்பட்டது. தற்போது 40 உறுப்பினர்களுடன் செயற்பட்டுவரும் இத்துறையானது 70 உறுப்பினர்களிற்கான திறனைக் கொண்டுள்ளதுடன் நிபுணர்கள், அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள், நோயாளிகள், மற்றும் 2016ம் வருடத்தில் திட்டமிடப்பட்ட மைல்கல்களை பூர்த்தி செய்த குழுக்களான கட்டுப்படுத்துனர்கள், வழங்குனர்கள்(சப்ளையர்), உறுப்பினர்கள் மற்றும் பிஆர் துணைக்குழுவினர் எனப்படும் நான்கு துணைக்குழுக்களை நியமித்ததன் மூலம் உறுப்பினர்கள் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் நம்பிக்கை மற்றும் நேர்மையை பெற்றுக்கொள்ளல் மற்றும் தக்கவைத்துக்கொள்ளல் என்பவற்றில் கவனம் செலுத்துகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM