தெற்காசியாவில் தற்போது பிறக்கும் போதே குழந்தைகள் இதயக் கோளாறுகளுடன் பிறக்கிறார்கள். அதிலும் புளூ பேபி எனப்படும் இதயக்குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கிறார்கள்.
இவர்களுக்கு ஸ்டெம்செல் சிகிச்சை வழகுவதன் மூலம் அவர்களின் பாதிப்பு முழுமையாக நீக்கப்படமுடியும் என்று மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
புளூ பேபி பாதிக்கப்பட்ட குழந்தைகள் அழுதால் உடல் முழுவதும் நீல நிறமாகி விடும். பொதுவாக எம்முடைய இதயத்தில் இருக்கும் இரண்டு இரத்த குழாய்கள் தான் இதயத்திற்கான குருதியை செலுத்துகிறது. அதிலும் சுத்திக்கரிக்கப்படாத இரத்தம் வலது பக்க இதய அறையிலிருந்து இரத்த குழாய்கள் மூலம் நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படும். அவை அங்கு சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்தின் இடது பக்கத்திற்கு வந்து, அங்கிருந்து உடல் முழுவதும் பம்ப் செய்யப்படும். இந்நிலையில் இந்த புளூ பேபியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பல்மனரி இரத்தக்குழாயின் அளவு இயல்பை விட குறுகியதாக இருக்கும். அதனால் போதிய அளவிலான இரத்தம் நுரையீரலுக்குச் செல்வதில்லை. இதனால் சுத்திக்கரிக்கப்படாத அசுத்தமான இரத்தம், சுத்திக்கரிக்கப்பட்ட இரத்தத்துடன் சேர்ந்து உடல் முழுவதும் பம்ப் செய்யப்படும் நிலை உருவாகிறது. இதனால் போதிய அளவிற்கு ஓக்ஸிஜன் இதயத்திற்கு கிடைக்காத சூழல் உருவாகிறது. இதயத்திற்கு ஓக்ஸிஜன் கிடைக்கவில்லை எனில் இதயம் செயலிழக்கும் நிலை உருவாகலாம். பழுதடைந்த இரத்த குழாய்களை சத்திர சிகிச்சைகள் மூலம் சீரமைக்கவேண்டும். இதன் போது இரத்த குழாய்களை மட்டுமே சீரமைத்தால் போதுமானதல்ல. இதயத்தில் பழுதடைந்திருக்கும் பகுதியிலுள்ள செல்களும் புதுப்பிக்கப்படவேண்டும்.
இதனால் இத்தகைய பாதிப்பிற்குள்ளான குழந்தைகளின் பெற்றோர்களின் இரத்த வகை கண்டறியப்பட்டு, அவர்களின் தந்தை அல்லது தாயின் எலும்பு மஜ்ஜையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஸ்டெம்செல் எடுக்கப்பட்டு சிகிச்சையின் போது பயன்படுத்துவார்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தப்படும் இத்தகைய ஸ்டெம் செல்கள் அங்கு புதிய செல்கள் வளரத் தொடங்குகின்றன. இது போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது ஏராளமான குழந்தைகள் குணமடைந்திருக்கிறார்கள்.இது தற்போது சர்வதேச அளவில் பெரியதொரு கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டொக்டர் K M செரியன்.,
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM