யானை தாக்கி ஒருவர் மரணம்

Published By: Raam

03 Jan, 2017 | 08:33 AM
image

மட்டக்களப்பு- பெரிய புல்லுமலை- 40 ஏக்கர் வட்டை வயற்பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெரிய புல்லுமலை தும்பாலஞ்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 73 மூன்று வயதுடைய தம்பிராசா பரமானந்தன்  (72) உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கூலித்தொழிலாளியான இவர் மாடுகளை அழைத்துக்கொண்டு வரும்போது எதிரேவந்த யானை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.  யானையைக் கண்டதும் தப்பியோடியவேளை இடறிவிழுந்துள்ளார். இதையடுத்து யானை மிதித்துக்கொன்றுள்ளதாகப் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமாகியுள்ளதாகவும் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டு மரணமடைந்தவரது குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நீட்ட காலமாக தொடர்ந்துவரும் யானைத் தொல்லையால் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.

அறிக்கைகளின் படி கடந்த வருடத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடந்த 2012 முதல் 2016 வரையில் 37 பேர் யானைத்தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகவும் மாவட்ட செயலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50