மட்டக்களப்பு- பெரிய புல்லுமலை- 40 ஏக்கர் வட்டை வயற்பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெரிய புல்லுமலை தும்பாலஞ்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 73 மூன்று வயதுடைய தம்பிராசா பரமானந்தன் (72) உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
கூலித்தொழிலாளியான இவர் மாடுகளை அழைத்துக்கொண்டு வரும்போது எதிரேவந்த யானை தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. யானையைக் கண்டதும் தப்பியோடியவேளை இடறிவிழுந்துள்ளார். இதையடுத்து யானை மிதித்துக்கொன்றுள்ளதாகப் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமாகியுள்ளதாகவும் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டு மரணமடைந்தவரது குடும்ப உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நீட்ட காலமாக தொடர்ந்துவரும் யானைத் தொல்லையால் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்.
அறிக்கைகளின் படி கடந்த வருடத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கடந்த 2012 முதல் 2016 வரையில் 37 பேர் யானைத்தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகவும் மாவட்ட செயலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM