(சதீஸ் )
புதுவருடத்தை முன்னிட்டு விலைக்கழிவில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக வவுனியாவிலுள்ள பிரபல்ய ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த இரண்டு தினங்களாக இங்கு வரும் பொதுமக்களுக்கு ஆடைகள் விற்பனைக்கு வழங்கப்படவில்லை.
வவுனியா கண்டி வீதியிலிருக்கும் பிரபல்யமான ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக கடந்த இரண்டு தினங்களாக மக்கள் கூட்டங் கூட்டமாக அலைமோதுகின்றனர். புதுவருடத்தை முன்னிட்டு விலைக்கழிவில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த இரண்டு தினங்களாக இங்கு வரும் பொதுமக்களுக்கு ஆடைகள் விற்பனைக்கு வழங்கப்படவில்லை. இன்று மாலையும் இப்பகுதிக்கு ஆடைகளை கொள்வனவு செய்வதற்குச் சென்றபோதும் அனுமதி வழங்கப்படவில்லை.
ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றதா? இல்லையா? என்பது தெளிவின்மையால் பொதுமக்கள் கடந்த இரண்டு தினங்களாக காத்திருப்பதுடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் நெடு நேரமாக காத்திருக்கின்றதை காணக் கூடியதாக இருந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM