மனைவி பணம் தர மறுத்தமையால் கணவன் தீ மூட்டி தற்கொலை

Published By: MD.Lucias

29 Dec, 2016 | 10:17 AM
image

தனது மனைவியிடம் பணம் கேட்டு தர மறுத்தமையால் கணவன் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய சிவபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இச் சம்பவம் தொடர்பாக மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குணகுமார் முன்னிலையில் இறந்தவரின் மனைவி ரமேஷ் அனிஷா சாட்சியமளிக்கையில்,

 இறந்தவரான எனது கணவர் சிவபாலன் ரமேஷ_ம் (வயது 35) நானும் திருமணம் முடித்து பதினொரு வருடங்களாகின்றன.

எங்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். நாங்கள் மன்னார் எழுத்தூர் லூசியா வீதி பகுதியில் வசித்து வருகின்றோம். 

எனது கணவர் மேசன் வேலை செய்பவர். எனது கணவருக்கு குடி பழக்கம் உண்டு. இவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் தலைதூக்குவது வழமையாகும்.

சம்பவம் அன்று  24.12.2016 எனது கணவர் தலைமன்னாரிலுள்ள தனது தாயாரின் வீட்டுக்கு சென்று பிற்பகல் திரும்பிய பின் மதுபோதையில் வந்து என்னிடம் பணம் கேட்டு தகராரு பண்ணினார். 

நான் பணம் கொடுக்க மறுக்கவே அவர் தனக்கு தானே மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.

பின் இவரை நாங்கள் காப்பாற்றி அன்றைய தினமே மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் 28.12.2016 மரணித்துள்ளார் என தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09