எம்மில் பலரும் வீதியில் பயணிக்கும் போதோ அல்லது வேறிடத்திலோ விபத்திற்குள்ளாகும் போது எதிர்பாராதவிதமான எலும்பு முறிவு ஏற்படுகிறது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சையளித்தாலும், எலும்பு முறிவிற்கான சிகிச்சையின் கால அவகாசமும், அவை குணமாகக்கூடிய காலஅவகாசமும் அதிகமாக இருக்கின்றன என்று நோயாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன் சிகிச்சையின் போது இரத்த இழப்பும் அதிகமாக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மருத்துவத்துறையினர் இதற்கான தீர்வை ஒன்றை கண்டறிந்திருக்கின்றனர். அது தான் C=arm என்ற நவீன கருவி. இந்த கருவி மூலம் சிகிச்சையின் போது எடுக்கப்படும் எக்ஸ் றே படங்களை உடனடியாக கணினி திரையில் நேரடியாக காண முடியும். இதன் மூலம் எலும்பு சரியாக எந்த இடத்தில் உடைந்துள்ளது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் சத்திர சிகிச்சை இன்றி தோலில் துளைகள் போட்டு அதன் மூலம் உடைந்த எலும்புகளை சேர்க்கவும், கம்பிகள் பொருத்தவும், முதுகெலும்பில் திருகாணி மற்றும் பிளேட்டுகளை பொருத்தவும், உடலின் உள்ளே உள்ள உடைந்த இரும்புத் துண்டுகள், கண்ணாடி துண்டுகளை எளிதில் நீக்கவும் இக்கருவி பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் காலநேரம் வீணாவது தடுக்கப்படும். நோயாளிகள் எளிதில் குணம் அடைவர். சத்திர சிகிச்சையின் போது ரத்தப் போக்கினால் ஏற்படும் அனிமீயா போன்ற நோய்கள் தாக்காது.
டொக்டர் புகழேந்தி M.S.,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM