கொமர்ஷல் வங்கி மேற்கொள்ளும் சுற்றாடலுக்கு நேசமான நடவடிக்கைகள் 2015ஆம் ஆண்டில் மிக உறுதியான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது. அதன் நான்கு கிளைகளில் சூரிய சக்தி பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து கிளைகளுக்கான சூரியசக்தி பொறிமுறை கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளன. இவை தவிர மேலதிகமாக 20 கடதாசி பாவனையற்ற இயந்திரங்களும் தருவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் மிகப் பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி சூரிய சக்தி மூலம் ஏற்கனவே 40 கிலோவாட் மின்சாரத்தை பெற்று வருகின்றது. பலாங்கொடை, பொரளை, நாரஹேன்பிட்டி, மகரகம ஆகிய கிளைகளில் இந்த சூரிய சக்தி மின்சார முறை அமுலில் உள்ளது. கொள்ளுப்பிட்டி, சிற்றி அலுவலகம், பிரதான வீதி, கம்பஹா மற்றும் நுகேகொடை ஆகிய இடங்களிலும் இந்த முறை அமுலுக்கு வந்ததும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு 240 கிலோவாட்டாக அதிகரிக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி அதன் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் மேலும் ஐந்து கிளைகளில் 2016ஆம் ஆண்டில் சூரிய சக்தி முறையை அமுல் செய்யவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM