உலக தமிழ் வம்சாவளி என்ற அமைப்பு (GOTO- Global Organisation of Tamil Origin) உலகளாவிய தமிழர்களைக் குழுவாகக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் மூலமாக கடந்த 3 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவரும் உலகத் தமிழர் திருநாள் விழாவின், உலகத் தமிழர் வம்சாவளி ஒன்றுகூடல் நிகழ்ச்சி வருகிற ஜனவரி 6ஆம் திகதி கிண்டியில் உள்ள ராயல் மெரீடியன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
உலக தமிழ் வம்சாவளி அமைப்பினால் வருடந்தோறும் வழங்கப்பட்டுவரும் உலகத் தமிழன் விருதுக்கு நாடுகடந்து தமிழன் பெருமையை உரக்க ஒலிக்கச் செய்த தமிழர்களில் ஒருவருக்கு ‘உலகத் தமிழர் விருது’ வழங்கப்படும். இம்முறை கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த சிவா அய்யாதுரை மற்றும் முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நீதியரசர் நவநீதம் பிள்ளை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டு கொடுக்கப்பட்ட பட்டியலில், ஆஸ்கார் மேடையில் தமிழை உரக்க ஒலித்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த உலகத் தமிழர் விருது வழங்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM