இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள டிசெம்பர் 31ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்விவகார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்னாருடைய இறுதிக் கிரியைகளுக்கு பூரண அரச அனுசரனை வழங்கப்படும் என்றும் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார்.
அதேவேளை, மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் உடல் இன்று பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் பிரகாரம், இன்று காலை 10.30 தொடக்கம் 11.30 வரை, மறைந்த மூத்த அரசியல்வாதியான ரட்ணசிறி விக்ரமநாயகவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கருஜெயசூரிய தெரியப்படுத்தியுள்ளார்.
ரட்ணசிறி விக்ரமநாயக்க 2000 -2001 ஆண்டு மற்றும் 2005 - 2010 ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM