அமெரிக்காவின் பெரல் துறைமுகம் தாக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாக்குதலுக்குள்ளான பகுதியை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே முதன் முறையாக பார்க்கச் சென்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஜப்பான் பிரதமரை உத்தியோகப்பூர்வமாக ஹவாய் தீவிற்கு வரவேற்றுள்ளார்.
தொடர்ந்து இருவரும் பெரெல் துறைமுகம் அமைந்துள்ள ஓஹாகு தீவின் ஜக்கிய அமெரிக்க அரிசோனா ஞாபகாரத்த தளத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்கள்.
1941 ஆம் ஆண்டு ஜப்பானால் பெரெல் துறைமுகம் தாக்கப்பட்டதில் 2400 இற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அது இரண்டாம் உலக மகா யுத்தத்தை உருவாக்கியதோடு, பழிதீர்க்க 1945 ஆம் ஆண்டு ஜப்பான் மீது அமெரிக்கா தொடுத்த அணுகுண்டு தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவிற்கு வந்தது.
இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்காவால் தாக்குதலுக்குள்ளான ஹிரோஸிமா பகுதியை பரக் ஒபாமாவும், ஜப்பானால் தாக்குதலுக்குள்ளான பெரெல் துறைமுகத்தை அந்நாட்டு பிரதமரும் இவ்வருடம் பார்வையிட்டுள்ளனர்.
இதுவே இரு நாட்டு தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற முதல் தருனமாகும்.
இருப்பினும் இருநாட்டு தலைவர்களும் குறித்த தாக்குதல் தொடர்பாக வருத்தமோ அல்லது மன்னிப்போ தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கதகு விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM