செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கரண்டி ; அறிவியல் வளர்ச்சி மிக்க மனிதர்களின் நடமாட்டத்திற்கான அறிகுறியா?

Published By: Ponmalar

27 Dec, 2016 | 06:36 PM
image

செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியை காட்டும் படங்களை ஆராய்ந்தப்போது அதில் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய சாப்பாட்டுக் கரண்டி ஒன்றின் தோற்றம் வெளிப்பட்டுள்ளதாக நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நாசா அண்மைக்காலமாக செவ்வாய் கிரகத்தில் மனித நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இருப்பதாக கூறி ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் இந்த வருடம் கிடைக்கப்பெற்ற இரண்டாவது கரண்டி இதுவாகும்.

இச்சம்பவம் தொடர்பாக நாசா குழுவினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுவது, செவ்வாயில் அறிவியல் வளர்ச்சி நிலையில் உள்ள மனித நடமாட்டங்கள் உள்ளன. அதற்கு ஆதாரமானதுதான் கிடைக்கப்பெற்ற இரண்டு கரண்டிகள். அறிவியல் வளர்ச்சிமிக்க மனிதர்களே கரண்டிகளை பயண்படுத்துவர் அந்தவகையில் குறித்தச் சைகைகள் மனித நடமாட்டம் இருப்பதை ஊகிப்பதற்கு சான்றாக விளங்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆய்வுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இன்றளவும் ஆய்வாரள்கள் செவ்வாய்கிரகத்தில் மனிதன் வாழலாம். இதற்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் எனும் வாதத்தை நிலைநாட்டுவதற்கு தொடர்ச்சியான ஆய்வுகளை நாசா முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right