வவுனியாவில் இடம்பெறும் ஊழல்களை உயரதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையா? மக்கள் விசனம்

Published By: Robert

27 Dec, 2016 | 04:17 PM
image

வவுனியா வடக்கில் பல வருடங்களாக சமூர்த்தியில் ஊழல் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதமளவில் ஆதாரத்துடனும் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களுடனும் இது சம்பந்தமான மகஜர் ஒன்றை வவுனியா மாவட்ட அரச அதிபருக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை தொடர்ந்தும் இந்த பிரதேசங்களில் சமூர்த்தி போன்ற அரசின் மக்கள் நலன் திட்டங்களில் மோசடிகள் நடைபெறுவதாக அறியப்படுகின்றது.

அத்துடன் ஏற்கனவே தவறிழைத்தவர்கள் மீது எதுவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் உத்தியோகஸ்தர்கள் பயமற்று இருக்கிறார்கள் என்பதுடன் இவ்வாறான மோசடி உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை தொடர்ந்து வவுனியா வடக்கில் இடம்பெறும் இந்த ஊழல்களை வடக்கு பிரதேச செயலாளர் ஏன் கண்டுகொள்ளவில்லை.? அத்துடன் அரசியல் பிரமுகர்கள் ஏன் இதற்கு கேள்வி கேட்கவில்லை எனவும் தாம் என்ன ஒதுக்கப்பட்ட மக்களா என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே தவறுயிழைத்த அதிகாரிகள் மீதும் உத்தியோகத்தர்கள் மீதும் உரிய நடவடிக்கையை அதற்குறிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இதற்குரிய தீர்வினை பெற்றுத்தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27