தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என அவர்களது பெற்றோர்களும், மனைவிமாரும் இன்று கிளிநொச்சியில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் 10 பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் ஒரு பெண் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தனது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் பலிகொடுத்துள்ள நிலையில் தற்போது இருக்கின்ற ஒரு மகன் தமிழ்நாடு சென்ற நிலையில் அங்கு வைத்து கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அங்கு அவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். சட்ட ரீதியாக விசா எடுத்து சுற்றுலாவுக்குச் சென்ற மகனை சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வந்துள்ளதாக கூறி அதற்கு ஒப்பம் இடுமாறு தொடர்ந்தும் துன்புறுத்தி வருகின்றனர் என தெரிவிக்கின்றனர்.
யுத்த காலத்தில் மிகமோசமாக மன உளைச்சலுக்கும், பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்த எங்களுக்கு எங்களது பிள்ளைகள் உண்ணாவிரதம் இருந்து வருவதான செய்தி எங்களை மனதளவில் பாதித்துள்ளது.
அத்துடன் அவர்கள் சில வேளை ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை மண்ணித்து தயவு செய்து விடுதலை செய்யுங்கள் என திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைத்திருக்கும் ஈழத்தமிழர்கள் 10 பேரில் ஒருவரின் தந்தையான உமாகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றேன்.
எனது கணவர் கைது செய்யப்படும் போது இரண்டாவது குழந்தை 7 மாதம் வயிற்றில் இருந்தது. தற்போது எனது குழந்தைக்கு அப்பாவின் முகம் தெரியாது. மூத்த மகள் 4 வயது நாளாந்தம் அப்பா எங்கே என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றாள்.
தயவு செய்து எனது பிள்ளைகளுக்காக எனது கணவரை விடுதலை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர்.
மேலும் தனது அப்பாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நான்கு வயது பெண் குழந்தை அழுதவாறு கேட்டுக்கொண்டமை மனதை நெகிழ வைத்த சம்பவமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM