சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 12 வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் சுனாமி தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இம்மாவட்டத்தில் சுனாமியினால் 2800 பேர் பலியானதுடன் 600க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
நாவலடி, டச்பார், புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. இக்கிராமத்தில் மாத்திரம் 1800 பேர் பலியாகினர்.
சுனாமிக்கு உறவுகளை பலிகொடுத்த உறவுகள் கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் இலங்கை தமிழரசுக் கட்சத் தலைவர் மாவை சேனாதராஜா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குமாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் நினைவு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM