கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொண்ட விலங்குகள் காப்பக ஊழியர்கள். தாம் பராமரித்த நாய்கள் யாவும் தத்தெடுக்கப்பட்ட நிலையில், தாங்களே கூடுகளுக்குள் சென்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள பைக் பீக்ஸ் மானுட அமைப்பானது விலங்குகளை வருமானம் தரும் நோக்கத்திற்காக பராமரித்து வராத ஒரு அமைப்பாக செயற்பட்டுள்ளது. குறித்த அமைப்பில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் விடுமுறையை களிக்க வீடுகளுக்கு சென்ற நிலையில் காப்பக ஊழியர்கள் விலங்குகளை அடைத்து வைக்கும் கூடுகளுக்குள் சென்று தமது பண்டிகை கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் குறித்த மானுட அமைப்பானது, பண்டிகை விடுமுறையை ஒட்டி நாய்கள் தத்தெடுப்பதற்கு ஏதுவான வீடுகளை ஆய்வியல் ரீதியில் இனங்கண்டுள்ளனர். குறித்த காப்பகத்தின் பராமரிப்பிலுள்ள நாய்கள் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முதலாகவே தத்தெடுக்கும் பட்சத்தில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த பிராணிகளுக்கான கொடுப்பனவுகள் யாவும் தள்ளுபடி என அதிரடி அறிவிப்பை காப்பகம் விட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்பாகவே தத்தெடுக்கப்பட்டுள்ளன என காப்பகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM