தாய்மை ஸ்தானம் அடையும் போது மனிதன், விலங்குகளுக்குகிடையே எந்த பேதமும் இல்லை. அம்மா என்றால் அன்பு என்றாகி விடுகிறது.
குட்டிகள் பிறந்து விட்டால், ஒவ்வொரு விலங்கினத்திடமுமே மாற்றத்தை காண முடியும். தனக்காக வாழாமல் குட்டிகளுக்காக வாழ தொடங்கி விடும். அங்கே ஓடுவதும் இங்கே ஓடுவதுமாக இருக்கும். குட்டிகளுக்கும் சேர்த்து இரை தேட வேண்டுமே. அதனால், அவற்றின் பொறுப்பு அதிகரித்துவிடும். பால் குடி மாறிய குட்டிகளை வளர்ப்பதற்கு எல்லா விலங்குகளுமே மனிதர்களைப் போலவேத்தான் கஷ்டப்பட்டுகின்றன.
ஒவ்வொரு விலங்கினங்களுமே தாய்மை ஸ்தானத்தை அடையும் போது தங்களின் பசியை மறந்து விடுகின்றன. குட்டிகளின் பசி மட்டும்தான் அவற்றின் மனதில் நிற்கிறது. தற்போது அவற்றை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஒவ்வொரு விலங்கினங்களுமே தாய்மை ஸ்தானத்தை அடையும் போது தங்களின் பசியை மறந்து விடுகின்றன. குட்டிகளின் பசி மட்டும்தான் அவற்றின் மனதில் நிற்கிறது. தற்போது அவற்றை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், தெரு நாய் ஒன்றிற்கு ஒருவர் கிரில் சிக்கன் வழங்குகிறார். கிரில் சிக்கனை வாயில் கவ்விக் கொண்டதும் அந்த நாய் எங்கேயோ ஓடுகிறது. வழக்கமாக பசியில் இருக்கும் நாய்கள் உணவிட்டால், லபக் லபக் என்று சாப்பிட்டு விடும். ஆனால் இந்த நாய் சற்று வித்தியாசமாக ஓடத் தொடங்கியதால், அந்த நபரும் நாயின் பின்னாலேயே ஓடுகிறார். அத்துடன் நாயின் செயலையும் வீடியோவாக பதிவு செய்து கொள்கிறார்.
சில நிமிடங்கள் ஓடிய அந்த தெரு நாய் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும் நின்று விடுகிறது. ஒரு இடத்தில் இருந்து சில நாய்க்குட்டிகள் அந்த நாயை நோக்கி ஓடி வருகின்றன. அவைகள் பெரும் பசியுடன் இருக்கின்றன. வாயில் கொண்டு வந்த சிக்கனை தனது குட்டிகளின் முன் போடுகிறது தாய் நாய். ஆனால், ஒரு குட்டிக்கு கூட அந்த சிக்கன் போதாது. உணவு குறைவாக இருந்தாலும் அந்த தாய் நாயின் அன்புதானே பெரியது. தெருநாய்கள் அவற்றின் குழந்தைகளை வளர்க்க எவ்வளவு கஷ்டப்படுகின்றன என்பதை இந்த வீடியோ விளக்குகிறது,
இந்த நிகழ்வை படம் பிடித்த நபர் அதனை இணையத்தில் வெளியிட்டார். இணையத்தில் வைரலாகியது. இலட்சக்கணக்கானோர் அதனை பார்த்துவிட்டு நெகிழ்ந்து போனார்கள். 'அப்படி ஒரு லவ்வபிள் அம்மா எங்கேயிருக்காங்க.. 'என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். பலர் குட்டிகளை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM