அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் முஸ்லிம்கள் மீதான கொள்கையை நடைமுறைப்படுத்த விடாமல் தடுப்பதற்காக முஸ்லிம்கள் பற்றிய தரவுகளை அழிப்பதற்கு ஓபாமா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2001 ஆம் ஆண்டு இரட்டைகோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவிற்குள் வரும் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பற்றிய தரவுகள் தேசிய குடிவரவு அடிப்படையின் கீழ் அமெரிக்காவால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
அத்தோடு அவர்களை தீவிர கண்கானிப்பிற்கு உட்படுத்தி வரும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது.
இந்நிலையில் முஸ்லிம்களின் வருகை குறித்த தரவு பதிவு செய்யும் நடைமுறை 2011 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க சட்டவாக்கவாக்கத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த சட்டம் தொடர்பாக கடுமையான நடைமுறைப்படுத்தல்களை பின்பற்ற உள்ளதாக டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் அறிவித்த நிலையில் பல்வேறு விமர்சனங்கள் அத்திட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது ஆட்சியிலுள்ள தேசிய ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அமெரிக்காவின் மதச்சார்பின்மையை டிரம்பின் குறித்த திட்டம் பாதிக்கும் என கவலை வெளியிட்டு வந்த நிலையில், ஓபாமா தேசிய வரவேடு பதிவு தரவுகளை இல்லாது செய்து டிரம்பின் திட்டத்திற்கு தடைகளை ஏற்படுத்து வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக ஓபாமாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM