(க.கிஷாந்தன்)
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் நாளை மலரவுள்ள நத்தார் பண்டிகையினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த நத்தார் பண்டிகையினை முன்னிட்டு பல கிறிஸத்தவ ஆலயங்களில் தெரிவு செய்யப்பட்ட ஏழை மக்களுக்கு உலர் உணவு பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் பங்கு தந்தை லெஸ்லி பெரேராவின் தலைமையில் நடைபெறவுள்ள நத்தார் பண்டிகையினை முன்னிட்டு ஹட்டன் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 150 குடும்பங்களுக்கு அரசி, பருப்பு, செமன், நூட்லிஸ், சீனி உட்பட உலர் உணவு பொதியொன்று இன்று 10 மணியளவில் வழங்கப்பட்டன.
இதேவேளை நத்தார் தினத்தினை முன்னிட்டு வீடுகளில் மாட்டுத்தொழுவம் அமைத்து அலங்கரிக்கபட்ட நத்தார் மரங்கள் போன்றன அமைத்து வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.
இன்று நள்ளிரவு 12 மணியளவில் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் இயேசு பிரானின் பிறப்பினை நினைவு கூர்ந்து விசேட தேவ ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM