மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 8.53 மணிக்கு கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று, ஆலயத்திற்கு முன்னால் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் மஞ்சள் கோட்டில் வீதியை கடக்க முற்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மாங்காட்டையை சேர்ந்த சிவகுரு ரமேஸ் (36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பஸ் சாரதியை கைது செய்ததுடன் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM