பருத்தித்துறை கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு

Published By: Robert

29 Dec, 2015 | 04:07 PM
image

பருத்தித்துறை கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவரின் சடலம் நேற்று காலை வெளிச்சவீட்டுக்கு அருகில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முனையைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஸ் சந்திரசேகரம் (வயது 38) என்பவரின் சடலமே கரை ஒதுங்கியுள்ளது.

பருத்தித்துறை பொலிஸாரின் உதவியுடன் சடலத்தைப் பார்வையிட்ட பருத்தித்துறை பதில் நீதிவான் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பருத்தித்துறைக் கடலில் கடும் காற்று மற்றும் கடற்கொந்தளிப்பினால் படகு ஒன்று கவிழ்ந்ததில் அதில் சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் மற்றைய இருவரும் கரையை அடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் காணாமல் போனவரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26