மு.இராமசந்திரன்
நாவலபிட்டி கலபட மேல்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் இரண்டு வீடுகள் சேதமாகியுள்ளதுடன் தீயை அணைப்பதற்கு முற்பட்ட இளைஞன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு 9 மணியவிலே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கலபட மேற்பிரிவு லயன் குடியிருப்பொன்றில் மூடியிருந்த குறித்த வீட்டில் திடிரென தீரவியுள்ளது அயலவர்களின் உதவியுடன் சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ள போதும் ஒருவீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மற்றையவீடு பகுதியளவில் கூறைப்பகுதி சேதமாகியுள்ளது தீயை அணைக்க முற்றபட்ட இளைஞன் ஒருவர் தீயினால் காயமுற்று நாவலபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் பணிப்புரிந்த குறித்த வீட்டிலுள்ளவர்கள் உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்த போதே தீ விபத்து சம்பவித்துள்ளது.
முற்றாக சேதமடைந்த குடியிருப்பிலிருந்த தொலைகாட்சி மற்றும் குளிர்சாதனப்பெட்டி கட்டில் உட்பட பெருமதிமிக்க வீட்டு உபகரணங்கள் அனைத்தும் தீயினால் நாசமடைந்துள்ளது.
தீ விபத்து சம்பவித்த குடியிருப்பை பிரதேச கிராம உத்தியோகஸ்த்தர் தோட்ட முகாமையாளர் மற்றும் பொலிஸார் பார்வையிட்டு பாதிக்கப்படவர்கள் அவர்களின் உறவினர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார கோளாரே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் சேதவிபரங்கள் தொடர்பிலும் தீ பரவல் தொடர்பிலும் விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM