எலியின் வெறிச்செயல் - களியாட்டத்துக்கு சென்ற தாயால் குழந்தைக்கு நேர்ந்த கதி

21 Dec, 2016 | 11:57 AM
image

இரவு நேர களியாட்டத்துக்கு செல்வதற்காக தாய் ஒருவர் தனது குழந்தை வீட்டில் தனிமையாக விட்டுச் செல்ல, குறித்த குழந்தையை இராட்சத எலி ஒன்று கடித்து கொலை செய்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தென்னாபிரிக்காவின் ஜொகனஸ்பேர்க்கின் கெட்லொங் நகரப் பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய தாய் ஒருவர், தனது இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தையை மாத்திரம் தூக்கிக்கொண்டு பெண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளார்.

இரவு களியாட்டங்கள் முடிந்து தனது புதிய காதலனுடன் வீட்டிற்கு வந்த தாய், குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். குழந்தையின் உடலில் இராட்சத எலியின் கூறிய பற்களால் கடிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

எலி குழந்தையின் உடற்பாகங்களை தின்றுள்ளதோடு எஞ்சிய சில பாகங்கள் மாத்திரமே வீட்டில் கிடந்துள்ளன. 

அயலவர்கள் இச்சம்பவம் பற்றி கூறும் போது, குறித்தப் பெண் வருட ஆரம்பம் முதலே அடிக்கடி இவ்வாறு குழந்தையை தனிமையில்

விட்டு  குடிக்கச் சென்று விடுவதாகவும்,  குழந்தைப்பற்றி யாராவது கேட்டால் அது தனது சகோதரியிடத்தில் இருப்பதாகவும் கூறுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

குறித்த குழந்தை தொடர்ச்சியாக அழுத நிலையில் உறக்கத்திற்கு செல்வது வழமையாக இடம்பெற்று வருகின்றது.

அப்பெண் தாயாக இருப்பதற்கு தகுதியற்றவள். ஒரு குழந்தையை குடிக்குமிடத்திற்கு கூட்டிச் சென்றதால் அக்குழந்தை அதி~;டவசமாக உயிர் தப்பியுள்ளது. 

இப்பகுதியில் எலிகள் அதிக இருப்பது தெரிந்தும் குழந்தையை விட்டு சென்ற இப் பெண்ணை கட்டாயம் சிறையில் அடைத்து சித்திரவதை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தையை சரியான முறையில் பராமரிக்காமல் இருந்த குற்றத்திற்காக குறித்த பெண்ணை பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

இதேவேளை உடன்பிறந்த ஆண் குழந்தையை அவரின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13