(அப்துல் கையூம்)
அறியாத்தனமாக குண்டூசியொன்றை விழுங்கிய 4 வயதுக் குழந்தையொன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக குழந்தையின் உறவினர்கள் தெரிவித்தனர்.
ஏறாவூர் நகரைச் சேர்ந்த இந்தக் குழந்தை மேசையின் மீது காணப்பட்ட குண்டூசியை அதன் விபரீதம் தெரியாத நிலையில் எடுத்து வாயில் போட்டுள்ளது.
பின்னர் அந்தக் குண்டூசி வயிற்றுக்குள் சென்றுள்ளது பற்றி அறிந்த பெற்றோர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
பின்னர் அக்குழந்தை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே சோதனை செய்த வேளையில் குண்டூசி குடலில் நிலைக்குத்தாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கையான முறையில் மலத்துடன் குண்டூசியை வெளியேற்றுவதற்கான சிகிச்சைகள் வைத்தியசாலையில் அளிக்கப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM