பெற்றோரே அவதானம் ; குண்டூசியை விழுங்கிய குழந்தை வைத்தியசாலையில் அனுமதி

Published By: Raam

21 Dec, 2016 | 10:25 AM
image

(அப்துல் கையூம்)

அறியாத்தனமாக குண்டூசியொன்றை விழுங்கிய 4 வயதுக் குழந்தையொன்று நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக குழந்தையின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகரைச் சேர்ந்த இந்தக் குழந்தை மேசையின் மீது காணப்பட்ட குண்டூசியை அதன் விபரீதம் தெரியாத நிலையில் எடுத்து வாயில் போட்டுள்ளது.

பின்னர் அந்தக் குண்டூசி வயிற்றுக்குள் சென்றுள்ளது பற்றி அறிந்த பெற்றோர் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

பின்னர் அக்குழந்தை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குழந்தையின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே சோதனை செய்த வேளையில் குண்டூசி குடலில் நிலைக்குத்தாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையான முறையில் மலத்துடன் குண்டூசியை வெளியேற்றுவதற்கான சிகிச்சைகள் வைத்தியசாலையில் அளிக்கப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04