குளிரின் போது படுக்கையில் போர்த்திக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் தடித்த போர்வையால் உடலை மூடியவாறு பாராளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்று சிலிய பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
கார்லா ரூபிலர் (38 வயது) என்ற மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் தலைநகர் சான்தியகோவில் இடம்பெற்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரின் போது தனது இருக்கையில் தடித்த போர்வையால் போர்த்தியவாறு அமர்ந்திருந்தமை அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்றைய தினம் பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக கட்டணங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சட்டப் பிரேரணையொன்று குறித்து விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறவிருந்தன.
இது தொடர்பில் கார்லா கூறுகையில், தான் மிகவும் சுகவீனமுற்றிருந்ததாகவும் இந்நிலையில் முக்கியத்துவம் மிக்க பாராளுமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டும் என விரும்பி தனது சுகவீனத்தையும் பொருட்படுத்தாது அங்கு ஆஜராகியிருந்ததாகவும் தெரிவித்தார்.
“ நான் கடும் சுகவீனமுற்றிருந்தேன் அதனால் என்னால் மேற்படி சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எவ்வழியிலாவது நோய்க்கு இதமளித்து பாராளுமன்ற விவாதத்திலும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பிலும் பங்கேற்ற முடிவு செய்தேன்" என்று அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM