செக்குடியரசின் டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவாவின் (26) தொடர்மாடி குடியிருப்பில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தின் போது அவர் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.
இன்று காலை 8.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
35 வயதான கொள்ளையர் ஒருவரே டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவாவை தாக்கியுள்ளார்.
பெட்ரா கிவிடோவாவின் விரல்கள் மற்றும் தசைநார் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பெட்ரா கிவிடோவா தெரிவிக்கையில், குறித்த கொள்ளைச் சம்பவமானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது அல்ல என தெரிவித்துள்ளார். இதேவேளை தான் உபாதையிலிருந்து நீங்க வேண்டும் என்று பிராத்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தனது பேஸ்புக் பக்கத்தின் பதிவிட்டுள்ளார்.
பெட்ரா கிவிடோவா 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் விம்பில்டன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், தரப்படுத்தலில் 2 ஆம் இடத்தையும் பிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM