கடந்த ஆட்சிக்காலத்தின் போது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள 40 இலட்சம் பெறுமதியான அதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கொழும்பு அப்துல் ஹமீட் வீதியில் உள்ள சில்வர்சுமித் லேன் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த மோட்டார் சைக்கள் கைப்பற்றுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளானது பாதாள உலக குழுவினரின் இரகசிய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு பாதாள உலக குழு தொடர்பான இரகசிய தகவொலுன்று கிடைத்தமைக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 1200 சி.சி. இயந்திர சக்திக்கொண்ட “டுக்காட்டி” ரக மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவிக்கையில், குறித்த மோட்டார் சைக்கிள் நண்பர் ஒருவரால் தனக்கு பரிசளிக்கப்பட்டதென்றும், அவர் இறந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை எமது நாட்டின் வீதிகளில் செலுத்த முடியாது.
மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தின் அதீத சக்தியினால் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு இந்நாட்டில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இவ்வகையான மோட்டார் சைக்கிள்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்துக்கு மாத்திரமே இறக்குமதி செய்யப்படுகின்றன.
அதுமாத்திரமின்றி குறித்த மோட்டார் சைக்கிளானது முன்னாள் மிக முக்கியஸ்தரின் மகனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த மோட்டார் சைக்கிள் எவ்வாறு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது?, யாருக்காக கொண்டுவரப்பட்டது?, மற்றும் இப்பொழுது இறுதியாக எவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நபரிடம் வந்துள்ளது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM