ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்மஸ் சந்தையினுள் திடீரென லொறி புகுந்தததில் 12 பேர் பலியானதோடு, 48 பேர் படுகாயமடைந்தனர்.
குறித்த தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள் வாங்கும் பகுதியில் மக்கள் அதிகமாகவுள்ள சமயத்தில் அப்போது கூட்டத்திற்குள் திடீரென லொறியினை வேகமாக மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் சம்பவயிடத்திலே உயிரிழந்ததோடு 48 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதலில் இருவர் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் உடல் நசுங்கி பலியானதாகவும், மற்றைய நபர் கைது செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பெர்லின் நகரில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM