ஆட்டிறச்சி விற்பனையில் ஈடுபட்ட நால்வர் கைது : பம்பலபிட்டியில் சம்பவம்

Published By: Robert

19 Dec, 2016 | 03:30 PM
image

(க.கமலநாதன்)

பம்பலபிடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆதர் வீதியில் ஆடுகளை வெட்ட அவற்றை இறைச்சியாக விற்ற குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் வெட்டப்பட்ட நிலையில் 15 ஆடுகளின் இறைச்சியும் கைபற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக பம்பலபிட்டிய ஆதர் வீதியில் அமைந்துள்ள இடமொன்றில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று பகல் 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வெட்டப்பட்ட நிலையில் 15 ஆடுகளும் அவற்றை வெட்ட பயன்படுத்தப்பட்ட 12 வாள்களும் கைப்பற்றபட்டுள்ளதாகவும் ஆடுகளை வெட்டி விற்பனை செய்யும் நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த இவர்கள் நால்வரும் 37,39,40 மற்றும் 46 வயது மதிக்கதக்கவர்கள் எனவும் எதிர்வரும் 23 ஆம் திகதி சந்தேக நபர்களை கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27