தேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் தமது வாக்குகளை மாற்றியளிக்கும் பட்சத்தில் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல் ஏற்பட்டு ஹிலாரியை ஜனாதிபதியாகும் சாத்தியமுள்ளது.
ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவாவதற்கு நாளை 20 ஆம் திகதி இடம்பெறும் தேர்வாளர் வாக்களிப்பில் ஹிலாரி அதிக வாக்குகள் பெற்றால் டிரம்பால் ஜனாதிபதியாகும் வாய்ப்பை பெறமுடியாத நிலை ஏற்படும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராதவிமாக டிரம்ப் வெற்றி பெற்றார். அதே நேரம் அதிக எதிர்பார்பபை ஏற்படுத்தியிருந்த ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சியான தோல்வியை தழுவியிருந்தார்.
ஹிலாரிக்கு டிரம்பை விட மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியை முடிவு செய்யும் அதிகாரமானது தேரல்தல் கல்லூரியினால் அளிக்கப்படும் வாக்குகளின் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படும்.
அதனடிப்படையில் டிரம்பிற்கு 306, ஹிலாரிக்கு 232 தேர்வாளர்கள் வாக்களித்து டிரம்ப் ஜனாதிபதியாவதை உறுதி செய்திருந்தனர்.
இந்நிலையில அடுத்தக்கட்ட தேர்வாளர் வாக்கு பதிவுகள் நாளை (20) இடம்பெறவுள்ளன. சில வேளை தேர்வாளர்கள் தமது வாக்கை மாற்றியளிக்கும் நிலையில் டிரம்ப் அடுத்த ஜனாதிபதியாவதில் சிக்கல் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஹிலாரிக்கு ஆதரவாளர்கள் ஆர்பாட்டங்களில் இடம்பெற்று வருவதோடு, தேர்வாளர்கள் ஹிலாரியை தேர்வு செய்யவேண்டும் எனும் கோஷங்கள் மேலோங்கியுள்ளன. அத்தோடு டிரம்பின் பேச்சுகள் நாட்டில் பிரச்சினையை தூண்டுவதாக கூறி குடியரசு தேர்வாளர்களுக்கு தனிபட்ட ரீதியில் ஹிலாரியை ஜனாதிபதியை தெரிவு செய்யக்கோரி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
நாளை இடம்பெறும் தேர்வாளர் வாக்களிப்பில் ஹிலாரி அல்லது டிரம்ப் ஆகியோரில் 270 வாக்குகளுக்கு மேல் பெறுபவர்கள் ஜனாதிபதியாகுவார்கள். இருவரும் தனியே 270 வாக்குகளை பெறாத நிலையில் நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு போகும் என்பது குறிப்பிடத்தகு விடயமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM