வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களால் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 9.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் 20 ஆயிரம் வரையான குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றி கடந்த 7 ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றன.
அவ்வாறான நிலையில் குறித்த பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
மீள்குடியேற்ற அமைச்சினால் தற்போது 65000 பொருத்து வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான பொருத்து வீடுகள் எமது சூழலுக்கு பொருந்தாது.
எமது வாழ்க்கைமுறை, எமது பிரதேசத்தின் காலநிலை, எமது பாரம்பரிய கட்டடமுறை என்பன இதன் மூலம் சிதைக்கப்படுகின்றது. மறைமுகமாக பல கட்டட வேலை செய்யும் தொழிலாளர்களது வேலை பறிக்கப்படுகின்றது.
பனையால் வீழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல கடந்த 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமக்கு 5 வருட ஆயுட்காலம் கொண்ட இவ்வாறான வீடுகளை வழங்க முற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. எனவே முன்னர் வழங்கப்பட்டது போன்ற நிரந்தர வீட்டுத்திட்டங்களை வழங்வேண்டும் என கோரியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM