இவ்வருடத்தில் முதல் ஒன்பது மாதங்களில் கடந்த ஆண்டுக்கு நிகராக நூற்றுக்கு 23 வீதத்தால் அரச வருமானம் அதிகரித்துள்ளதோடு. கடந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் 959 பில்லியனாக இருந்த அரச வருமானம், இவ்வருடத்தில் அதே காலப்பகுதியில் 1180 பில்லியனாக அதிகரித்துள்ளதென்று நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுங்க திணைக்களம், கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களின் செயற்றிறன் அதிகரித்துள்ளமையால் இவ்வருடத்தில் அரச வருமானம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. மேலும் முதல் 09 மாதங்களில் 1067 பில்லியன் ரூபா வரி மூலம் வருமானம் கிடைத்துள்ளது.
இதன்படி வரி மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமானது கடந்த ஆண்டை விட 22 சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதன்பலனாக இவ்வருடத்தில் வரவு செலவு பற்றாக்குறை குறைந்துள்ளது.
அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகள் போன்றவற்றிற்கு 2017ஆம் ஆண்டு வரவு–செலவு திட்டத்தினூடாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது அவற்றின் செயற்பாடுகளைப் பொறுத்தே என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள் ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM