நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு.!

Published By: Robert

18 Dec, 2016 | 04:37 PM
image

(பா.ருத்ரகுமார்)

அரிசி விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் இன்று முதல் உணவுப்பொதிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் அசெல சம்பத்,

அரிசி வலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் உணவுப்பொதியின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். இது இலாபமீட்டுவதற்காக மேற்கொள்ளப்ட்ட தீர்மானம் அல்ல. அரிசியின் விலை அதிகரிப்பால் நாம் ஏற்கனவே உள்ள விலையில் உணவுப்பொதிகளை விற்பதில் சிரமப்படுகின்றோம்

அதனடிப்படையில் மரக்கறி சாப்பாடொன்றின் விலை 100 ரூபாவிலிருந்து 110 ரூபாகவும் மீன் உணவுப்பொதியொன்று 130 ரூபாவிலிருந்து 140 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழி இறைச்சி சாப்பாட்டு பொதியொன்றின் விலை 160 ரூபாவிலிருந்து 170 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. இதன்காரணமாக அரிசியின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. சிலர் களஞ்சியப்படுத்தும்போது பெருமளவு அரிசியை சந்தைக்கு கொண்டுவராமல் பதுக்கிவிடுகின்றனர். அதுமட்டுமல்லாது விலங்குகளுக்கான உணவிலும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க முறையான திட்டமிடல் அவசியமாகும்.

எனவே இலங்கை நுகர்வோர் சபைக்கு நாம் ஒரு சவாலை முன்வைக்கின்றோம். முடியுமானால் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு பதுக்கி வைத்துள்ள அரிசி முட்டைகளை மீட்டுக்காட்ட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22