கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரேஸில் நாட்டின் கழகமொன்றின் கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள்.
குறித்த விமான விபத்தில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அதில் ஒருவரான பிரேசில் உள்ளூர் அணியான செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக வீரர் ஆலன் ரூஸ்செல் (27) வைத்தியசாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உயிர் பிழைத்ததை பற்றி கூறுகையில், நான் விபத்து நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் வரை விமானத்தில் கடைசி ஆசனத்தில் அமர்ந்திருந்தேன்.
அப்போது என்னிடம் வந்த கால்பந்து சங்க தலைவர் கடு கௌசோ ,நீங்கள் முன் ஆசனத்திற்கு சென்று அமருங்கள். பின்னர் பத்திரிக்கையாளர்கள் சிலர் அமர உள்ளார்கள் என கூறினார்.
நானும் முன் ஆசனத்திற்கு வந்து அமர்ந்தேன். பின்னர் சில நிமிடங்களில் நடந்த விபத்தில் பின் ஆசனத்தில் அமர்ந்து இருந்தவர்கள் எல்லோரும் உயிரிழந்து விட்டார்கள்.
நான் முன் ஆசனத்திற்கு வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM