யாழ்ப்பாணத்திற்கு கன்டர் ரக வாகனமொன்றில் கடத்திச்செல்லப்பட்ட 11 முதிரை மரக்குற்றிகளுடன் சாரதியொருவரை மாங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொக்காவில் பகுதியில் வீதிப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாங்குளம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.
பொலிஸார் குறித்த வாகனத்தை சோதனையிடுவதற்காக நிறுத்தியபோது மேற்படி வாகனம் நிறுத்தாது அதிகவேகமாக தப்பித்துச்செல்ல முற்ப்பட்டவேளை மோட்டார் சைக்கிளில் துரத்திச்சென்ற பொலிசார் உமையாள்புரம் பகுதியில் வைத்து வாகனத்தை மறித்து சோதனையிட்டனர்.
இதன்போது பல இலட்சம் ரூபா பொறுமதியான 11 முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்ட நிலையில் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்ததோடு வாகனத்தையும் முதிரைமரக்குற்றிகளையும் பொலிஸ் நிலயத்துக்கு எடுத்துச்சென்றனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மாங்குளம் பொலிசார், கைதுசெய்யப்பட்ட சாரதி மற்றும் மரக்குற்றிகளை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM