( எஸ்என்.நிபோஜன் )
கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிராமத்தில் கூடுதலான மதுபானப் போத்தல்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டிலும் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று வியாழக்கிழமை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும் 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட 18 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னவால் நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு, மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM