கடந்த இரண்டு தினங்களாக மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் கடல் பெருக்கெடுத்ததன் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
சுமார் 200 மீற்றர் வரை கடல் நீர் கிராமத்துக்குள் வந்துள்ளது இதன் காரணமாக நாவலடி கடலாட்சி அம்மன் கோவிலுக்கு முன்னாள் செல்லும் பிரதான பாதை நீரில் மூழ்கி காணப்படுகின்றது .
இது தொடர்பாக நாவலடி பிரதேச மீனவர் கருத்து தெரிவிக்கையில் வருடம் தோறும் இது போன்று கடல் பெருக்கு ஏற்படுவது வழமை ஆனால் இம்முறை சற்று அதிகரித்துள்ளது .
தற்போது எமக்கு தொழில் செய்வதற்கு முடியாத நிலை உள்ளதாகவும் மீனவர்களிடம் எந்தவித கேள்விகளும் கேட்க்காமல் ஆத்துவாய் வெட்டியதன் காரணமாக தற்போது மிகவும் கஷ்ட்டமான சூழ்நிலையில் தள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .
வாவியில் இருந்த மீன்கள் அனைத்தும் கடலில் ஓடிவிட்டது அன்றாடம் தொழில் செய்யும் எம்மிடமும் ஆத்துவாய் வெட்டுவது தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டும் .எமது துன்பம் அரச அதிகாரிகளுக்கு புரியாது .
எமக்கு இந்த அரசாங்கம் எதாவது வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் இன்று எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் திண்டாடுவதாக மீனவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோர தாண்டவம் ஆடிய சுனாமியில் அதிகமாக பாதிக்கப்பட்டும் அதிக உயிர்களை இழந்த கிராமம் நாவலடி என்பதுடன் தற்போது கடலை நம்பி 120 குடும்பங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM