சிவனொளிபாதமலை கோயிலில் காணாமல் போன காண்டாமணியை நாமும் தொடர்ந்து தேடி வருகின்றோம். இன்னும் கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புத்தசாசன அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகர், விஜயதாஸ அமைச்சரின் உரையின்போது குறுக்கிட்டு சிவனொளிபாதமலை கோயில் மணியைக் காணவில்லை. இது தொடர்பாக முறையிட்ட போதும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
இதன்போது நீதி அமைச்சர் பேசுகையில்;
நீங்கள் கூறுவது ஜே.வி.பி.யின் காண்டாமணியா? என்று தெரிவித்தபோது சபையில் எம்பிக்கள் சிரித்தனர்.
ஓம் நீங்கள் கூறியதனை நானும் அறிவேன். நாங்களும் சிவனொளிபாதமலை காண்டாமணியைத் தேடி வருகிறோம். ஆனாலும் இன்னமும் கிடைக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM