நடிகை வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்து வரும் 'சபரி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
தெலுங்கு இயக்குநர் அனில் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சபரி'. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
இவருடன் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நானி ஸாமிடி ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். உளவியல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மகா மூவிஸ் எனும் நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரித்திருக்கிறது.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அத்துடன் இப்படத்தின் பின்னணி பணிகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், '' திரையில் இதுவரை நான் ஏற்றாத புதிய வேடத்தில் நடிக்கிறேன். சைக்காலஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த படத்தில் எம்முடைய கதாபாத்திரம் பல அடுக்குகளை கொண்டிருக்கிறது. இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்புடன் சவாலான காட்சிகளில் நடித்திருக்கிறேன் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM