அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போட சூழ்ச்சி - எஸ்.எம்.மரிக்கார்

Published By: Digital Desk 2

08 Dec, 2022 | 05:06 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் வரை அரசியலமைப்பு பேரவைக்கான எதிர்கட்சியின் பெயர் பரிந்துரையை முன்வைக்க போவதில்லை.

அரசியலமைப்பு பேரவை ஊடாக தேர்தலை பிற்போட சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.தேர்தலை பிற்போடும் தேவை ராஜபக்ஷர்களுக்கு உண்டு ஆனால் நாட்டு மக்கள் தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பொருளாதார குற்றவாளிகள் குறித்து ஆராய தெரிவு குழுவை அமைக்க தயாரா என ஜனாதிபதி ஆளும் தரப்பினரிடம் கேட்க வேண்டும்.

ஏனெனில் பொருளாதார குற்றவாளிகளிடமே ஜனாதிபதி தஞ்சமடைந்துள்ளார்.தெரிவு குழு அமைக்க முடிந்தால் இரு கைகளையும் உயர்த்துங்கள் என ஆளும் தரப்பினரை நோக்கி சவால் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (டிச.08)  இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பெரிய இலக்கங்களால் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள பொய் தொடர்பில் கருத்துரைக்க போவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேச நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கவதாகவும், கடன் மறுசீரமைப்புக்கு பிரதான நிலை கடன் வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இதுவரை எவரும் கடன் வழங்கவில்லை,கடன் மறுசீரமைப்பும் இழுபறி நிலையில் உள்ளது.

பொருளாதார பாதிப்பு குற்றவாளிகள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழு அமைக்க தயார் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

பொருளாதார குற்றத்தை அவர் தஞ்சம் புகுந்துள்ள தரப்பினரே செய்தார்கள். ஆகவே தெரிவு குழு தொடர்பில் ஜனாதிபதி ஆளும் தரப்பினரிடம் வினவ வேண்டும். தெரிவு குழு அமைக்க நாங்கள் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

பொருளாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குங்கள் என சர்வதேச மனித உரிமை பேரவை முதன் முறையாக இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.

போராட்டத்தின் ஊடாக ஜனாதிபதியாக பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தின் உண்மை நோக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். மோசடி செய்யப்பட்ட அரச நிதி மீண்டும் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04