பதுளை மாவட்டத்தில் லுணுகலை, பசறை, நமுனுகுலை, எல்ல ஆகிய பகுதிகளில் நேற்று புதன்கிழமை (டிச. 7) பலத்த காற்று வீசியதால் அப்பிரதேசங்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக இன்றும் காலை வீசிய பலத்த காற்றினால் பசறை, நமுனுகுலை வீதியில் 12ஆம் கட்டைப் பகுதியிலும், அம்பலம் பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்தமையினால் பசறை - பண்டாரவளைக்கான பிரதான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
அங்குள்ள மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவ படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஹொப்டன் 19ஆம் கட்டை பெருந்தோட்ட பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்தமையினால் குறித்த வீட்டில் பெண்ணொருவர் காயமுற்றார்.
இந்நிலையில் அவர் லுணுகலை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அத்துடன் லுணுகலை பொலிஸ் சோதனைச் சாவடியின் மீது மரக்கிளையொன்று முறிந்து விழுந்ததில் சோதனைச் சாவடியும் சேதமடைந்துள்ளது.
மேலும், ஜனதாபுர பகுதியில் உள்ள வீதியில் மின்கம்பமொன்று முறிந்து விழுந்ததால் லுணுகலையில் இருந்து ஜனதாபுர ஊடாக மடூல்சீமை செல்லும் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அத்துடன் நமுனுகுலை பொலிஸ் நிலையத்தின் கூரைகளும் காற்றினால் சேதமடைந்துள்ளது.
மேலும், நமுனுகுலை பகுதியில் பம்பரகல பத்தன, கந்தசேன, இந்துகல, பிங்கராவ, கனவரல்ல ஆகிய பகுதிகளில் உள்ள வீட்டுக் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளதோடு, சில வீடுகளின் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.
பசறை பகுதியில் கோணக்கலை மேற்பிரிவில் உள்ள ஒரு வீட்டின் மீதும் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த வீடும், சில வீட்டுக் கூரைகளும் சேதமடைந்துள்ளன.
மீதும்பிடிய, எல்டப், டெமேரியா, மீரியபெத்த, கமேவெல, ஆக்கரத்தன்ன, பசறை நகர், மடுல்சீமை, றோபேரி ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றினால் கூரைகள் சேதமடைந்துள்ளன.
அத்தோடு பசறையிலிருந்து இங்குருகடுவ செல்லும் வழியாக புத்தல செல்லும் வீதியில் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் அந்த பகுதியிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் அன்றாட தொழிலில் ஈடுபடுவோரும் பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட தொழிலில் ஈடுபடுவோரும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இத்தகைய சூறாவளி அனர்த்தம் காரணமாக அப்பகுதிகளில் உள்ள சுமார் 26 பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM