யாழ்.பல்கலை மாணவர்கள் மோதல் ; வழக்கு விசாரணை முடிவு

Published By: Ponmalar

08 Dec, 2016 | 02:29 PM
image

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழ் சிங்கள இரு தரப்பு மாணவர்களும் தாம் தற்போது பகைமையை மறந்து சமாதானமாக இருப்பதாக தெரிவித்து, தமது முறைப்பாட்டை மீள கைவாங்கியதன் அடிப்படையில் இவ் வழக்கு நடவடிக்கையானது முடிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜீலை மாதம் 16ஆம் திகதி யாழ்.பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது சிங்கள மாணவர்கள் வழமைக்கு மாறாக வரவேற்பு நடனத்தில் வழமையாக இடம்பெறும் தமிழ் முறையை தவிர்த்து சிங்கள முறையிலான கண்டிய நடனத்தை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து இது தொடர்பாக ஆரம்பத்தில் கருத்து முரண்பாட்டில் ஆரம்பித்து இறுதியில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் கலவரமாக உருப்பெற்றிருந்தது.

அத்துடன் இவ் மோதல் கலவர சம்பவத்தில் சிங்கள மாணவன் ஒருவன் படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த மாணவனது முறைப்பாட்டுக்கு அமைய தமிழ் மாணவர்கள் சிலருக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. இதேபோன்று தமிழ் மாணவர்கள் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கமைய சிங்கள மாணவர்களுக்கு எதிராகவும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்தவகையில் குறித்த இரு வழக்கு விசாரனைகளும் ஒரே சமயத்திலாக கடந்த நான்கு மாதங்களாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்திருந்தது. அத்துடன் கடந்த 2 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது குறித்த இருதரப்பு மாணவர்களும் மன்றில் சட்டத்தரணி ஊடாக தாம் தற்போது ஒற்றுமையாக இருப்பதாகவும் எனவே இவ் வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதனையடுத்து நீதிவான், குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த நபர் தனது முறைபபாட்டை மீளப் பெறுவதாக அதே பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து அது தொடர்பாக அப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டால் இவ் வழக்கை முடிவுக்கு கொண்டுவரலாம் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய இன்று வழக்கானது, யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது  மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி சயந்தன் முன்னிலையாகியிருந்தார். 

இதன்போது கோப்பாய் பொலிஸார் குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பு மாணவர்களும் தாம் செய்திருந்த முறைப்பாட்டை மீள கைவாங்கியதாக மேலதிக அறிக்கையை மன்றில் சமர்பித்திருந்தனர். இதனடிப்படையில் குறித்த வழக்கானது முடிவுறுத்தப்படுவதாக நீதிவான் அறிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01