வெல்லாவெளியில் யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

Published By: Digital Desk 2

08 Dec, 2022 | 01:31 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (டிச. 7) இரவு காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விவேகானந்தபுரத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், தனிமையில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை தாக்கிக் கொன்றுள்ளதுடன், குறித்த பெண்ணின் வீடு மற்றும் தோட்டங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இந்நிலையில் மறுநாள் காலை அப்பெண் உயிரிழந்திருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த யானை தாக்குதலில் 66 வயதுடைய கிருஸ்ணபிள்ளை நீலாம்பிகை என்பவரே உயிரிழந்துள்ளார் என வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக வெல்லாவெளி பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவருவதால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் பிரவேசிப்பதை கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01