மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (டிச. 7) இரவு காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விவேகானந்தபுரத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், தனிமையில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை தாக்கிக் கொன்றுள்ளதுடன், குறித்த பெண்ணின் வீடு மற்றும் தோட்டங்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.
இந்நிலையில் மறுநாள் காலை அப்பெண் உயிரிழந்திருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த யானை தாக்குதலில் 66 வயதுடைய கிருஸ்ணபிள்ளை நீலாம்பிகை என்பவரே உயிரிழந்துள்ளார் என வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக வெல்லாவெளி பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவருவதால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் பிரவேசிப்பதை கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM