காலி மாவட்டத்தில் அதிகரித்துள்ள சிறுவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள்!

Published By: Digital Desk 3

08 Dec, 2022 | 11:43 AM
image

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடும்ப வன்முறையாக அதிகரித்துள்ள  நிலையில், அவ்வாறான குடும்பங்களின் தகவல்களை கண்டறிந்து தேவையான நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக காலி மாவட்ட சமூக அமைப்புக்கள் அபிவிருத்தி நிலையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சமூக அமைப்பு மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளதாவது,

தற்போது சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்  அதிகரித்துள்ளன.  இது தொடர்பான  தகவல்களை தினமும் பெறுகிறோம். அதன்படி தேசிய மட்டத்தில் அவற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க தீர்மானித்தோம்.

காலி மாவட்டத்தில் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் கிராமிய மட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின்படி, குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

எனவே பிரதேச செயலக மட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது.  அதன்படி, அக்மீமன, ஹிக்கடுவ, பத்தேகம, அம்பலாங்கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்கனவே அந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன.  எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிறுவனங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற சட்டத்தரணிகளின் உதவி குறித்தும் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக இளைஞர்கள் குழுவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தெரு நாடகக் குழுவுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44